×

விபத்தில் பெண் படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்

வேளச்சேரி: பெரும்பாக்கம், எழில் நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சவுமியா (23), தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று பெரும்பாக்கத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் (த.எ.102 பி) ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த இவர், தவறி கீழே விழுந்தார். அப்போது, பேருந்தின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில், அவரது இடது பக்க இடுப்பு, முதுகு தண்டு வடம், கால் தொடையில்  எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவரை மீட்டு  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விபத்துக்கு காரணமான டிரைவரை கைது செய்ய கோரியும், கூடுதல் பஸ் இயக்க கோரியும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்று கலைந்து சென்றனர்….

The post விபத்தில் பெண் படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Saumiya ,Perumbakkam ,Eshil ,Nagar ,Slum Replacement Board ,Dinakaran ,
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்